2018-ம் ஆண்டில் 1,00,000 பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிற்ணயிக்கப்பட்டு இது சம்மந்தமான பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றது.
23-09-2018 அன்று விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள அய்யனார் ஏரி மற்றும் பொன்னேரியில் விழுப்புரம் ரோட்ரி சங்கம் , வெங்கடாஜலபதி தொழில் நுட்ப கல்லூரி ரோட்ரக்ட் சங்கம் மற்றும் வனம் அற்க்கட்ட்ளை இணைந்து 25,000-ம் பனை விதைகள் நடவு செய்தது.
30-09-2018 அன்று விழுப்புரம் திரு.Ln.M.அன்பழகன் ஆடிட்டர் அவர்களும் வனம் அறக்கட்டளையும் இணைந்து பெரும்பக்கம் ஏரியில் 10,000 பனை விதைகளை நடவு செய்யப்பட்டது.இன்நிகழ்வில் விழுப்புரம் வட்டாட்சியர் திரு.அ.ர.சையத் மொஹமூத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் விதையை நடவு செய்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இப்பணியில் பெரும்பாக்கம் கிராம் இளைஞர்களும் தங்களை இணைது கொண்டனர்.
0 comments:
Post a Comment